taakvellakovil@gmail.com

Scroll News Bar

பல்வேறு ஆசிரியர்களுக்கு பலவருடங்களாக வழங்கப்படாமல் உள்ள நிலுவைத்தொகையினை பெற தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தொடர்போராட்டம்- விரிவான செய்திகள் மற்றும் புகைப்படங்கள் விரைவில் Flying Bee தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பல்வேறு கட்ட முயற்சிகளின் மூலமாக தேவையற்ற மாற்றுப்பணி உத்தரவுகள் இரத்து செய்யப்பட்டன. *_ _* *_ _* வெள்ளகோவில் ஒன்றிய நமது அமைப்பு உறுப்பினர்களுக்கு கூட்டணி டைரிகள் மற்றும் நாட்காட்டிகள் வழங்கப்படவுள்ளன. *_ _* *_ _* நாளை 27.03.2013 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளன. பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,வெள்ளகோவில் ஒன்றியம் வெற்றிக்கனியை பறிக்க வாழ்த்துகிறது

Monday 25 March 2013

ஆற்றிய பணிக்கு அகம் மகிழ்விக்கும் விழா

”வாழ்நாள் கல்விச்சிந்தனையாளர் அப்துல் மஜீத்” விருது


திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஒன்றியம் சார்பில் முத்தூர் ஊ.ஒ.ந.பள்ளி, இடைநிலை ஆசிரியை திருமதி.செ.கிரேஸி அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா 22.03.2013 அன்று துரை ராமசாமி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மாலை மணி 5 க்கு துவங்கியது. முத்தூர் பேரூராட்சித்தலைவர் திருமதி. செல்வநாயகி முத்துக்குமார் அவர்கள் குத்துவிளக்கேற்றி விழாவினைச் துவக்கி வைத்தார். விழாவில் வெள்ளகோவில் நகராட்சித்தலைவர் திரு. கந்தசாமி அவர்களும், முத்தூர் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் திரு. முத்துக்குமார் அவ்ர்களும், நமது கூட்டணியின் மாநில மகளிரணிச் செயலாளர் திருமதி. கிருஷ்ணகுமாரி அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக் கலந்து கொண்டு விழாப்பேரூரை ஆற்றினர். விழாவில் நடுப்பாளையம் பள்ளித்தலைமையாசிரியர் திரு. பெரியசாமி அவர்களும், எல்.கே.சி. நகர் பள்ளித்தலைமையாசிரியர் திரு.ஞா. சின்னப்பராஜ், வெள்ளகோவில் உதவித்தொடக்கக்கல்வி முன்னாள் பணியாளர்கள், திருமதி. தாயம்மா மற்றும் திருமதி.மேரி ராஜாமணி அவர்களும் சிறப்பிக்கப்பட்டனர். வெள்ளகோவில் வட்டார வளமைய முன்னாள் மேற்பார்வையாளர் திரு. பெரியசாமி, துரைராமசாமி உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் திரு. மரிய லூயிஸ், உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் திருமதி அரு.பொன்னழகு போன்றோர் திருமதி.கிரேஸி ஆசிரியைக்கு புகழாரம் சூட்டினர். ஆசிரியையின் முன்னாள் மாணவர்களாகிய குறுக்கத்தி பள்ளி தலைமையாசிரியர். திரு. தமிழ்ச்செல்வன் அவர்களும், மங்கலப்பட்டி பள்ளி இடைநிலை ஆசிரியர் திரு.கார்த்திகேயனும் ஆசிரியையிடம் படித்த நாட்களை நினைவு கூறினர்.  விழாவினை மோளக்கவுண்டன்வலசு இடைநிலை ஆசிரியர் திரு.ஜெயபாலன் மற்றும் செலம்பகவுணடன்வலசு தலைமையாசிரியர் திரு.கோ.பிரபாகர் தொகுத்துவழங்கினர். விழா ஏற்பாடுகளை தென்னங்கரைபாளையம் பட்டதாரி ஆசிரியர் திரு. சிவசங்கர் அவர்களும், அய்யம்பாளையம் பள்ளி இடைநிலை ஆசிரியர் திரு.ஹரிஹரன் அவர்களும் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment